Friday, 21 September 2012

பின்னிரவு பொழுதில்

அடங்க மறுக்கிறது,,

மனது..

தீரா நினைவலைகளை,

எழுப்பி விட்டு,,

என் மன சுவற்றில்,,

படபடவென்று மோதவிட்டு,,

என் உறக்கத்தை சிதறடிக்கிறது..

**
எங்கோ தூரத்தில்,

ஊளையிடும் ஓநாய் ஒலியை போல,,

கதறுகிறது மனது..

வெப்பம் கொண்ட,

பாலை நிலத்தில்,

இதயம் அறுந்து துடிக்கிறது.

**
எந்த சமாதானத்தையும் ஏற்க மறுத்து,,

இழந்து விட்ட,

இளமை நினைவுகளை,,

எழுப்பி விட்டு,,

அரற்றி கொண்டிருக்கிறது..

**
நான் ,,

மீண்டும் ஒருமுறை,,

உறக்கம் கலைந்த,,

பின்னிரவு பொழுதில்,

கலங்கியபடி..

**

No comments:

Post a Comment