** பிரியமுடன் **
மௌனம் கலந்த,
உன் புன்னகையில்,
என் மனம் சிக்கிய,
வினாடியில் இருந்து,
இன்று வரை,
உன் மௌனம் கலைக்க,
போராடுகிறேன், மிக நேர்மையாக.
**
ஏதோ ஒரு தயக்கம்,
தடவிய உன் மௌனம்,
உதடு தாண்டி,
கலையும் நாளை,
எதிர்நோக்கி,
காத்திருக்கிறேன்.
**
என் தவிப்பும்,
உன் மௌனமும்,
ஒன்றிணையும் நாளை,
தினம் கனவுகளில்,
ரசிக்கிறேன்..
**
நிஜம் நாடி நிற்கும்,
மனது,
கனவு சுமக்கிறது,
இப்போதைக்கு..
No comments:
Post a Comment