Friday, 7 September 2012

பெண்கள்..புதிர்..

ஒட்டாமலே திரிந்தவள்..

வருடத்தின் ஏதோ ஒரு நாளில்,,

மட்டும் எட்டி பார்த்தவள்,

எங்கோ தொலைவில் ,,

தானுண்டு, தன் வேலையுண்டு ,,

என்றிருப்பவள்..

**
அவ்வப்போது பாசமழை பொழிபவள்,

அலைபேசி வழியே மட்டும்..

*
நெருங்கிய உறவுகளில் ஒருவள் இவள்..

**
நெருங்கிய உறவில்,,

முக்கியமான பெரியவர் இறப்பு நிகழ்கிறது,ஓர்நாளில்..

அருகில் உள்ளவர்களே,,

கனத்த துயரத்தை தாங்கியபடி,,

அமைதியாக நின்றிருக்க,,

**
எங்கோ தொலைவில் இருந்தபடி,,

ஒட்டாமல் இருந்த , இவள்,,

கதறி அழுகிறாள்..

எப்படி ?

**
இன்றைய தலைமுறை பெண்கள்,,

பெரும் புதிர்..

No comments:

Post a Comment