Thursday, 13 September 2012

என் பார்வைகள்



பயணங்களில் என் பார்வைகள்,

சில அல்லது பல சமயங்களில்,

வித்தியாசமான கோணங்களில்,,

லயித்திருக்கும்..

ரயில் பயணங்களை பொறுத்தவரை,

வேகமாய் பின் செல்லும்,

மரங்கள், வயல்கள்,

எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..

மற்றபடி சாதாரண பயணங்களில்,

ஏதோ ஒரு கணத்தில்,,

மெல்ல வானம் பார்க்கும்,,

என் பார்வையின் கோணங்கள்,

மேகத்தின் வடிவமைப்புகளில்,

கவனம் செலுத்தும்.

அழகிய ஓவியங்களாக,

சிறுவயதில் படித்த,,

பறக்கும் குதிரைகள் போல,,

பயங்கரமான,,அசுரனை போல,

அந்த மேக ஓவியங்கள்,,

என்றும் மனதை கவர்பவை..

இந்த மேக கூட்டத்தை,,

ரசிப்பதில்,,

இன்றும் நான் சிறுவன்தான்..

அவ்வப்போது உள்ளிருக்கும்,,

சிறுபிள்ளைத்தனம்,,

அல்லது,,

குழந்தைதனம்தான்,,

என் பார்வையின்,  

வித்தியாச கோணங்களுக்கு,,

காரணம் என்பதை ,,

வெகு காலம் கழிந்து,,

உணர்ந்து கொண்டேன்..


**
இந்த புகைப்படம் ,

ஏதோ ஒரு கோணத்தை மனதில் நிறுத்தி,

எடுத்து,, பின் பார்த்தபோது,,

அதை விட அழகான வேறு வடிவத்தில்,

உயிர்பெற்று வந்தது..
**
இனி அவ்வப்போது,,

என் அலைபேசி வழியே எடுத்த,,

புகைப்படங்களும்,,

இங்கே அலங்கரிக்கும்.

*
முடிந்தவரை சிரமப்பட்டு,,

ரசித்துவிடுங்கள்..

*
மற்றபடி நன்றி என்றென்றும்..

No comments:

Post a Comment