அதிகாலைக்கு ,,
சற்று முன்பே எழுந்தேன்..
பிரம்ம முஹுர்த்தம் என்று,,
சொல்லக்கூடிய அந்த வேளையில்.
மனம் நிறைய,
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களை,,
வெள்ளை தாளில்,,வடிக்க,,
ஆவலோடு அமர்ந்தேன்..
வசதியாக அமர்ந்தேன்..
சூடாக ஒரு தேநீர் பருகினேன்..
*
புத்தம் புதிய பேனாவோடு,,
அழகிய வெள்ளை தாளில்,
சுழி போட்டு துவங்கியாயிற்று..
*
சற்றே சிறு தடங்கல்,,
ஆர்ப்பரிக்கும் எண்ணங்களில்,,
எதை முதலில் துவங்குவது,,
கோர்வையாக எங்கிருந்து,, துவக்குவது..
சிறிய குழப்பம்..
சிந்தனை செய்தேன்,,
பிடிபடவில்லை.
நேரம் கடந்து கொண்டிருந்தது..
ஒரு வழியே பிடிபட்டு,,
எழுத துவங்கினேன்..
இருப்பினும் மனம் ஒப்பவில்லை..
*
எழுதிய வெள்ளை தாளை,,
கசக்கி எறிந்தேன்..
இப்போது வெறுப்பு மெல்ல,,
என் மனதை ஆட்க்கொள்ள,,
மீண்டும்,,
சிந்தித்தேன்..
*
நேரம் கடந்து கடந்து,,
நன்றாக விடிந்து விட்டிருந்தது..
நான் இன்னும் எழுத துவங்கவே இல்லை..
No comments:
Post a Comment