Friday, 7 September 2012

குழப்பம்..

அதிகாலைக்கு ,,

சற்று முன்பே எழுந்தேன்..

பிரம்ம முஹுர்த்தம் என்று,,

சொல்லக்கூடிய அந்த வேளையில்.

மனம் நிறைய,

ஆர்ப்பரிக்கும் எண்ணங்களை,,

வெள்ளை தாளில்,,வடிக்க,,

ஆவலோடு அமர்ந்தேன்..

வசதியாக அமர்ந்தேன்..

சூடாக ஒரு தேநீர் பருகினேன்..

*
புத்தம் புதிய பேனாவோடு,,

அழகிய வெள்ளை தாளில்,

சுழி போட்டு துவங்கியாயிற்று..

*
சற்றே சிறு தடங்கல்,,

ஆர்ப்பரிக்கும் எண்ணங்களில்,,

எதை முதலில் துவங்குவது,,

கோர்வையாக எங்கிருந்து,, துவக்குவது..

சிறிய குழப்பம்..

சிந்தனை செய்தேன்,,

பிடிபடவில்லை.

நேரம் கடந்து கொண்டிருந்தது..

ஒரு வழியே பிடிபட்டு,,

எழுத துவங்கினேன்..

இருப்பினும் மனம் ஒப்பவில்லை..

*
எழுதிய வெள்ளை தாளை,,

கசக்கி எறிந்தேன்..

இப்போது வெறுப்பு மெல்ல,,

என் மனதை ஆட்க்கொள்ள,,

மீண்டும்,,

சிந்தித்தேன்..

*
நேரம் கடந்து கடந்து,,

நன்றாக விடிந்து விட்டிருந்தது..

நான் இன்னும் எழுத துவங்கவே இல்லை..

No comments:

Post a Comment