Friday, 7 September 2012

** தீரா காதல்.. தீரா நினைவுகள்.**

அன்று ,,
பள்ளி இறுதி பருவம்..

அந்த அழகிய மலைவாசஸ்தலத்தில்,,


தினசரி பள்ளி முடிந்து,,


நீ வரும் பேருந்து வரை,,


காத்திருப்பேன்,.


*

புளிமூட்டையாய் பயணிகளை,,

நிரப்பி கொண்டு வரும் பேருந்தில்,,


கடைசி ஜன்னலோர இருக்கையில்,,


என்னை பார்ப்பதற்கென்றே,,


அமர்ந்திருக்கிறாய்,,


என்று எனக்குள்,


கற்பனை குதிரைகளை தட்டியபடி,,


அந்த குளிர்ந்த தூறல் காலங்களிலும்,,


என் முகத்தில் பட்டு தெறிக்கும்,


மழை சாரலில் நனைந்த படி,,


பெரும்பாலும்,,


பேருந்து படியில் மட்டும் ஒற்றை கால்


வைத்தபடி,,


உன்னை கவர நான் செய்த,,


சாகசங்களை,, நீ ரசித்தது,,


பின்னொரு நாளில் தெரிந்து,


மகிழ்வுற்றேன்..


**

அன்றுதான்,,

என் வாழ்க்கையில் மிக மகிழ்வாக இருந்தேன்..


** காதல்.. அழகிய காதல் **

No comments:

Post a Comment