Friday, 21 September 2012

** உணர்வற்ற பொழுதுகள் **


சற்றே சிதிலமடைந்து,

சமூகத்தின் ஏளன பார்வையை,

தரிசித்து,

உணர்விழந்த நாட்களில்..

விரக்தி மேலிட,

இயலாமை கோபம் கொள்ள,,

என் கனவுகள், மெல்ல வீழ்ந்த அந்த சமயத்தில்,

உலகம்,,

இரண்டாயிரமாவது வருடத்து,

கொண்டாட்டங்களில் முழ்கி இருந்தது..

**
விடிந்தால்,,

புதிய நூற்றாண்டு என்ற பொழுதில்,,

அந்த இரவு,,

ஏக்கங்கள் நிறைந்த,,

இரவாக மாறி இருந்தது எனக்கு..

தனிமை துணையாக,,

சிதிலமடைந்த கனவுகளின் தாக்கம்,

மனதை பிசைய,,

மெல்ல துளிர்த்திருந்த காதலும் கூட,

மறைய துவங்கி இருந்தது..

**
புதிய நூற்றாண்டு விடிந்தது..

உலகெங்கும் உற்சாக துள்ளல் போட,,

இங்கே இவன் மகிழ்வு தொலைத்து,,

சலனமின்றி உறங்கி கொண்டிருந்தான்..

வீழல் துவங்கியது..

***
இனி.. ??

உணர்விருந்தால் தொடரும்..
**

No comments:

Post a Comment