Friday, 7 September 2012

* வாழ்க பாரதம் *

இந்த தேசம்,

உள்ளடக்கிய வரலாறு,,

சமூக நீதி கோட்பாடு,,

அறிவியல் பொக்கிஷங்கள்,,

மருத்துவ சுவடி குறிப்புகள்,,

விலைமதிப்புள்ள,, அரிய பொக்கிஷங்கள்,,

ஆபரணங்கள்,

வீரமிகு கலைகள்,,

இன்னும் எத்தனையோ,,

தொடர்ந்து நடந்த படையெடுப்புகள்,,

உள்நாட்டு கலவரங்களில்,,

தொலைத்து விட்டோம்..

*
நிறைய களவும் கொடுத்தாயிற்று,

அந்நியர்களுக்கு..

ஒரு வழியாக,,

இந்த தேசம் அன்னியர் பிடியில் இருந்து,

விடுபட்ட பின்னர்,,

என்ன செய்திருக்க வேண்டும் ,,

நம் அரசியல்வாதிகள்.. ?

*
இந்த அரிய பொக்கிஷங்கள்,,

தற்போது எங்கே என்று அறிந்து,,

அதை செம்மை படுத்த முயற்சித்திருக்க வேண்டும்..

களவு போன நம்,,

மதிப்பு மிக்க செல்வங்களை,,

மீட்டு தந்திருக்க வேண்டும்..

உயரிய வரலாற்றை,,

உண்மை வரலாற்றை,

சிறந்த முறையில் கற்பித்திருக்க வேண்டும்.

*
இதை எல்லாம் செய்தார்களா என்று,,

கேட்டால்,,

பதில் உங்களுக்கே தெரியும்..

*
பத்து தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதிலேயே,,

குறியாய் இருக்கும்,,

ஊழல் அரசியல்வாதிகளுக்கு,,

நம் தேசத்து வரலாற்றின் மீது,,

என்ன அக்கறை வந்துவிடபோகிறது..

*
எது எப்படியோ,,

உரக்க சொல்வோம்..

* வாழ்க பாரதம் * என்று பெருமிதமாக..

No comments:

Post a Comment