Thursday, 30 August 2012

மனைவியின் கேள்வி

இன்றைய பொழுது,,

மதியத்திற்கு மேல்,,

அழகாக இருந்தது,

மழை தூறலின் உதவியால்..

**
இதமான  குளிர் தென்றலோடு,,

மெல்லிய  மழை சாரலில் ,,

நனைந்தவாறே ,,

அலுவலகம்   முடிந்து,

கோயம்புத்தூர் நகர வீதிகளில்,,

வலம் வந்து,,

வழக்கமான தேநீர் கடையில்,,

நிறுத்தினேன், என் வாகனத்தை.. 

**
கோவை மக்களின்,,

இயல்பான உபசரிப்பு   வார்த்தைகளில்,

வழக்கமான அந்த கடைக்காரர்,

தேநீர் கொடுத்து உபசரித்தார் ..*(காசு கண்டிப்பா கொடுக்கணும்)_

**
தண்ணீரோடு, கதை பேச,,

நண்பர்கள் சிலரும்,, வந்து சேர ,,

களை கட்டியது,

வெட்டி பேச்சு..

**
வெட்டி பேச்சு தொடர்ந்த ,,

சில நேரத்தில்,,

அலைபேசி அழைப்பு,,

மனைவியிடம் இருந்து..

நண்பர்களிடம்  இருந்து சற்று தள்ளி நின்று,,

எங்க இருக்கீங்க என்ற மனைவியின் கேள்விக்கு,,

வீட்டுக்கு போயிட்டு  இருக்கேன் என்ற உண்மை (!!!?) உரைத்தேன்..

**
" சரி சரி,, வீட்டுக்கு போனதும்,,

கிரீன் டி போட்டு குடிங்க,. வெளிய கண்ட கண்ட பேக்கரீல  டி சாப்டாதீங்க  

நானும் அலுவலகம் முடிந்து,

பஸ்ல  வந்துட்டு இருக்கேன்"என்றாள்,..

**
மிக பணிவாக,,

சரி என்றேன் ,,

கடை தேநீரை,,

சுவைத்தபடியே..

No comments:

Post a Comment