Wednesday, 29 August 2012

தூறலில் நனைந்தபடி

பொழுது புலர்ந்தபோதே,,

ஏனோ,, குதிகாலில் துவங்கிய வலி,,

மெல்ல வியாபித்து,, முட்டிவரை பயணித்து,,

என் தினசரி,, அதிகாலை நடைக்கு,, தடை விதித்தது..




 
**

சற்றே சிரமப்பட்டு,, பால்,, தினமலர் வாங்கிய பொது,,

அப்போதுதான் ஆனந்த விகடன் புத்தக கட்டு வந்திறங்கியது..

சற்றே பெருமிதத்துடன்,,

இந்த வார ஆனந்த விகடனை வாங்கினேன். 
(( கட்டுகளை பிரித்தும் முதல் புத்தகம் , நான்தானே வாங்கினேன். பெருமை இருக்காதா என்ன ?)

மெல்ல வீடு வந்தபோது,, லேசாக தூர ஆரம்பித்தது தூறல்,,

மனைவியிடம் வழக்கம் போல கிரீன் டி எதிர்பார்த்து அவஸ்தையோடு,

காத்திருந்த பொழுதில்,, பரபரவென்று,, மேலோட்டமாக,, விகடனை மேய்ந்து,,

பின் தினமலரை மேய்ந்த போது,,

அதிசய நிகழ்வாக,, ப்ரு காபி வந்தது.. 

( தினசரி கிரீன் டீயின் கொடுமையை அனுபவிப்பவன் நான் )

காபி பருகி,,  பரபரவென்று  கிளம்பினேன்..

மனைவியை அலுவலகம் செல்ல பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டு,,

இரு சக்கன வாகனத்தை விரட்டினேன்,, 


தூறலில் நனைந்தபடி....

No comments:

Post a Comment