Thursday, 31 January 2013

யாருமற்றவன்

சற்றே சிரமம்,

கொண்டு,

நிதானம் பெற்று,

உறங்கிட முற்பட்டேன்,

பின்னிரவு ஒன்றில்..

*
சலசலவென்று,

அலைபாய்ந்த மனது,

அடங்க மறுத்தது..

எண்ண அலைகளின்,

அதி தீவிர தாக்குதல்களால்  , ,

நிலை குலைந்து போயிருந்தது,

மனது..

**
சீரற்ற இழப்புகளின்,

தொகுப்பாக இருந்தது,

எண்ண அலைகள்..

*
தொடர் தோல்வியின் வலிகள்,

மனதை ரணபடுத்தி இருக்க வேண்டும்..

சுற்றம், சூழல் கண்டு,

பின் என்னை கண்டு,

ஓவென்று கதறுகிறது,

தினம் பின்னிரவு பொழுதுகளில்..

**
உறக்கம்,

சமீபமாய் பின்னிரவுகளில்,

சுத்தமாக தொலைத்துவிட்டேன்.

**
ஒரு வெற்றி,

அசரடிக்கும் வெற்றி ,

அது மட்டுமே இன்றைய தேவை,

என் மனதிற்கு..

**
அதற்கு,

கடும் உழைப்பு ஒன்றே,

வழி என்றுணர்கிறேன்..

**
ஏனெனில்,

யாருமற்றவன் நான்,

வேறு வழி இல்லை..

No comments:

Post a Comment