என்னென்னவோ தோன்றுகிறது,
ஆழ்கடல் அமைதியில்,
சில வினாடிகள் ஓய்வும்,
எடுக்கிறது மனது..
ஒன்றும் புரிபடவில்லை..
எல்லாம் இழந்தாயிற்று..
இனி புதிதாய்,
துவங்கிட வேண்டும்..
புதிதாய் துவக்கம்,
எப்படி,
எங்கே என்று,
தடுமாறுகிறது,
மனது..
நான் உயிர்த்தே ,
ஆக வேண்டும்..
அதற்கான,
என் தேடலும்,
முயற்சியும்,
துவக்கமும்,
அவ்வப்போது தடம்,
புரண்டு கொண்டிருந்தாலும்,
ஒரு நம்பிக்கை,
என்னை செலுத்தி கொண்டிருக்கிறது.
நான் உயிர்த்தே ஆக வேண்டும்.
ஏனென்றால்,
என் இழப்புகள் நிறைய..
நான் உயிர்த்தே ஆகவேண்டும்,
ஏனென்றால்,
அற்றை நாட்களின்,
என்னை சுற்றிய,
நட்பு, மற்றும்,
உறவென்னும் வட்டத்தில்,
நகைப்பொலி கேட்கிறது,
இந்த வினாடியில்..
நான் உயிர்த்தே ஆக வேண்டும்.
ஏனென்றால்,
பொருளற்ற என்னை கண்டு,
இந்த சமூகம்,
சிரிக்கிறது..ஏளனமாக..
No comments:
Post a Comment