சற்றே சிரமம்,
கொண்டு,
நிதானம் பெற்று,
உறங்கிட முற்பட்டேன்,
பின்னிரவு ஒன்றில்..
*
சலசலவென்று,
அலைபாய்ந்த மனது,
அடங்க மறுத்தது..
எண்ண அலைகளின்,
அதி தீவிர தாக்குதல்களால் , ,
நிலை குலைந்து போயிருந்தது,
மனது..
**
சீரற்ற இழப்புகளின்,
தொகுப்பாக இருந்தது,
எண்ண அலைகள்..
*
தொடர் தோல்வியின் வலிகள்,
மனதை ரணபடுத்தி இருக்க வேண்டும்..
சுற்றம், சூழல் கண்டு,
பின் என்னை கண்டு,
ஓவென்று கதறுகிறது,
தினம் பின்னிரவு பொழுதுகளில்..
**
உறக்கம்,
சமீபமாய் பின்னிரவுகளில்,
சுத்தமாக தொலைத்துவிட்டேன்.
**
ஒரு வெற்றி,
அசரடிக்கும் வெற்றி ,
அது மட்டுமே இன்றைய தேவை,
என் மனதிற்கு..
**
அதற்கு,
கடும் உழைப்பு ஒன்றே,
வழி என்றுணர்கிறேன்..
**
ஏனெனில்,
யாருமற்றவன் நான்,
வேறு வழி இல்லை..
கொண்டு,
நிதானம் பெற்று,
உறங்கிட முற்பட்டேன்,
பின்னிரவு ஒன்றில்..
*
சலசலவென்று,
அலைபாய்ந்த மனது,
அடங்க மறுத்தது..
எண்ண அலைகளின்,
அதி தீவிர தாக்குதல்களால் , ,
நிலை குலைந்து போயிருந்தது,
மனது..
**
சீரற்ற இழப்புகளின்,
தொகுப்பாக இருந்தது,
எண்ண அலைகள்..
*
தொடர் தோல்வியின் வலிகள்,
மனதை ரணபடுத்தி இருக்க வேண்டும்..
சுற்றம், சூழல் கண்டு,
பின் என்னை கண்டு,
ஓவென்று கதறுகிறது,
தினம் பின்னிரவு பொழுதுகளில்..
**
உறக்கம்,
சமீபமாய் பின்னிரவுகளில்,
சுத்தமாக தொலைத்துவிட்டேன்.
**
ஒரு வெற்றி,
அசரடிக்கும் வெற்றி ,
அது மட்டுமே இன்றைய தேவை,
என் மனதிற்கு..
**
அதற்கு,
கடும் உழைப்பு ஒன்றே,
வழி என்றுணர்கிறேன்..
**
ஏனெனில்,
யாருமற்றவன் நான்,
வேறு வழி இல்லை..