சலனமற்று இருக்கிறேன்,
சில நாட்களாய்..
மழலை பொழுதில்,
இந்த உலகில்,
நினைவு தெரிந்த நாளில்,
இருந்து,
பல பொழுதுகளை,
கடந்தாயிற்று..
தித்திக்கும்,
மழலை காலம்,
இன்பமான,
இளமை காலம்,
தீரும் வரையில்,
பல காலங்களை,
பல பொழுதுகள்,
வழியே கழித்தாயிற்று..
இந்த எல்லா காலங்களிலும்,
எல்லா பொழுதுகளிலும்,
என்னை வழிநடத்தியவை,
அழகிய கனவுகள்..
நான் பச்சை புல்வெளியில்,
மெலிதான ஈர தென்றலை,
உள்வாங்கி,
களித்திருந்தேன்..
மெல்ல வெப்பம்,
என் உடலில் ஏறிய பொழுது,
வெது வெதுப்பாய்,
உணர்ந்தேன்..
சூழலும், பொழுதுகளும்,
மாறி மாறி,
உடன் வர,
என் கனவுகளும்,
துணைக்கு வர,
என் உழைப்பும்,
என்னுடன் இணைந்து,
கொள்ள,
வேகமெடுத்த காலத்தில்,
என்னை வேகமெடுக்க,
மறந்து விட்டேன்.
அளவுக்கதிகமான கனவுகளில்,
என்னை தொலைத்து விட்டேன்,
போலும்.
நிதர்சன வாழ்வியல் பக்குவங்கள்,
புரிபடவே இல்லை.
ஏச்சும், பேசும்,
ஏளனமும், அவமானமும்,
தொடர்ந்து சந்தித்த,
பொழுதில்,
வெப்பம் சுள்ளென்று,
உரைத்தது..
சுள்ளென்று உரைத்த வெப்பத்தில்,
திடுக்கிட்ட பொழுது,
இளமை தீர துவங்கி,
இருந்தது..
இப்பொழுது கடும் நெருக்கடியில்,
மன உளைச்சலில் இருக்கிறேன்.
தனித்து இருப்பது,
போன்றே உணர்கிறேன்..
எங்கு, எப்படி,
நடந்தது பிழை,
என்று தெரியவில்லை.
நான் மீண்டும்,
உயிர்க்க விரும்புகிறேன்.
இந்த நெருக்கடியில்,
நான் தப்பி,
பிழைத்து விட்டால்,
நல்லதொரு வாழ்வியல்,
பயணத்தில்,
இணைந்து விடுவேன்.
ஆனால்,
தினசரி நிதர்சன,
சூழல்கள்,
எனக்குள் அச்சத்தை,
விதைத்து,
என்னை புரட்டி கொண்டிருக்கிறது,..
நான்,
சலனமற்று இருக்கிறேன்,
சில நாட்களாய்,
அச்சமுற்ற மனதோடு..
சில நாட்களாய்..
மழலை பொழுதில்,
இந்த உலகில்,
நினைவு தெரிந்த நாளில்,
இருந்து,
பல பொழுதுகளை,
கடந்தாயிற்று..
தித்திக்கும்,
மழலை காலம்,
இன்பமான,
இளமை காலம்,
தீரும் வரையில்,
பல காலங்களை,
பல பொழுதுகள்,
வழியே கழித்தாயிற்று..
இந்த எல்லா காலங்களிலும்,
எல்லா பொழுதுகளிலும்,
என்னை வழிநடத்தியவை,
அழகிய கனவுகள்..
நான் பச்சை புல்வெளியில்,
மெலிதான ஈர தென்றலை,
உள்வாங்கி,
களித்திருந்தேன்..
மெல்ல வெப்பம்,
என் உடலில் ஏறிய பொழுது,
வெது வெதுப்பாய்,
உணர்ந்தேன்..
சூழலும், பொழுதுகளும்,
மாறி மாறி,
உடன் வர,
என் கனவுகளும்,
துணைக்கு வர,
என் உழைப்பும்,
என்னுடன் இணைந்து,
கொள்ள,
வேகமெடுத்த காலத்தில்,
என்னை வேகமெடுக்க,
மறந்து விட்டேன்.
அளவுக்கதிகமான கனவுகளில்,
என்னை தொலைத்து விட்டேன்,
போலும்.
நிதர்சன வாழ்வியல் பக்குவங்கள்,
புரிபடவே இல்லை.
ஏச்சும், பேசும்,
ஏளனமும், அவமானமும்,
தொடர்ந்து சந்தித்த,
பொழுதில்,
வெப்பம் சுள்ளென்று,
உரைத்தது..
சுள்ளென்று உரைத்த வெப்பத்தில்,
திடுக்கிட்ட பொழுது,
இளமை தீர துவங்கி,
இருந்தது..
இப்பொழுது கடும் நெருக்கடியில்,
மன உளைச்சலில் இருக்கிறேன்.
தனித்து இருப்பது,
போன்றே உணர்கிறேன்..
எங்கு, எப்படி,
நடந்தது பிழை,
என்று தெரியவில்லை.
நான் மீண்டும்,
உயிர்க்க விரும்புகிறேன்.
இந்த நெருக்கடியில்,
நான் தப்பி,
பிழைத்து விட்டால்,
நல்லதொரு வாழ்வியல்,
பயணத்தில்,
இணைந்து விடுவேன்.
ஆனால்,
தினசரி நிதர்சன,
சூழல்கள்,
எனக்குள் அச்சத்தை,
விதைத்து,
என்னை புரட்டி கொண்டிருக்கிறது,..
நான்,
சலனமற்று இருக்கிறேன்,
சில நாட்களாய்,
அச்சமுற்ற மனதோடு..